சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!
ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!
உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!
சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!
உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!
தற்செயலா இதைப் பார்த்தேன். நெகிழ்ந்து போச்சு. குழந்தைக்கு வாழ்த்துகள். (வீடியோவை பேஸ்புக்கில் ஷேர் செஞ்சுட்டேன்.)
shahjahanr
🙂