Feeds:
Posts
Comments

Archive for the ‘Rajini’ Category


விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ

ஏனென்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்

மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே
ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
தொல்லை நேராது தூயவனே

கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே (2)

பாடல்: விடுகதையா இந்த வாழ்க்கை
குரல்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
திரைப்படம்: முத்து

Read Full Post »


ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி (2)

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை (2)

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

(ஒருவன்)

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு (2)

வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே
இளமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது

(ஒருவன்)

பாடல்: ஒருவன் ஒருவன் முதலாளி
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
திரைப்படம்: முத்து

Read Full Post »


ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (2)

(ராஜா என்பார் மந்திரி என்பார்)

கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கும் வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை (2)

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழியில்லை

(ராஜா என்பார் மந்திரி என்பார்)

நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு (2)

ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன் (2)

மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

(ராஜா என்பேன் மந்திரி என்பேன்)

குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி (1977)

Read Full Post »


ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

திரைப்படம்: ஜானி (1980)
பாடகர்: சுஜாதா
இசை: இளையராஜா
வரிகள்: கங்கைஅமரன்
ஆண்டு: 1980

Read Full Post »


ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி… உன் தோளிலே…
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
வெளியான ஆண்டு : 1979

Read Full Post »


என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்….
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா
ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்….

என் வானிலே ஒரே வெண்ணிலா

.
படம் : ஜானி
பாடல் : கண்ணதாசன்
இசை : இளையராஜா
பாடியவர் : ஜென்சி
வெளியான ஆண்டு : 1980

Read Full Post »


என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே

என்னுயிர் நீ தானே…..ஹோ உன்னுயிர் நான் தானே…….ஹோ (2)
நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே

பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே
பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே
நீ தந்த சொந்தம் மாறாது
நான் கண்ட இன்பம் தீராது
உன்னருகில் உன்னிதழில் உன்மடியில்
உன்மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

………..என்னுயிர் நீ தானே…………

பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகே புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனின்
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

…………என்னுயிர் நீ தானே……….

படம்: பிரியா
பாடல்: ஜென்சி & ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

Read Full Post »


காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன… காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

நேற்றுப்போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை ஓ
நேற்றுப்போல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆ…. அ….. ஆ

அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே!
எண்ணம் யாவும்.. சொல்..லவா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்
ஆ ஆ ஆ ஆ
புன்னகை மின்னுதே
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்..லவா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன… காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
இசை :  இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Read Full Post »