சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும்..
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னைப் போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னைப் போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பாடல்: சொல்லவா கதை சொல்லவா
திரைப் படம்: நவராத்திரி
பாடியவர்: பி.சுசிலா
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
Leave a comment